இலங்கையில் 37,825 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

இலங்கையில் இன்று 32 ஆயிரத்து 539 சுகாதார பணியாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று கொழும்பில் ஆரம்பமானது. முதல் நாளில் 5 ஆயிரத்து 286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 32 ஆயிரத்து 539 பேருக்கு போடப்பட்டுள்ளது.இதன்படி இரு நாட்களில் 37 ஆயிரத்து 825 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.